தமிழகம் நெல்லையில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அதிமுக-வினர் மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!! Jun 12, 2021 பி. காவல்துறை நெல்லை: நெல்லை அதிமுக ஒன்றிய செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய 3 அதிமுக-வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதிகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் பன்னீர் செல்வதுடன் கலந்து ஆலோசிக்காமல் முடிவுகளை எடுத்ததால் தான் சட்டமன்ற தேர்தலில் தோற்றதாகவும் இதே நிலை நீடித்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது. இதனை தொடர்ந்து நெல்லை மாநகர் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில் மாலூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய 3 அதிமுக-வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் அனுமதியின்றி எதிர்ப்பு சுவரொட்டியை ஒட்டியதன் அடிப்படையில் மூன்று பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
குடிமைப் பணி தேர்வில் 3ம் முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
‘பிரிந்த உறவுகள் ஒன்று சேருவார்களாம்…’ துடைப்பத்தால் மாமன், மைத்துனரை அடிக்கும் விநோத திருவிழா: ஆண்டிப்பட்டி அருகே ருசிகரம்
ஏற்காடு மலைப்பாதையில் 5 பேர் பலி: வேகமாக பஸ்சை ஓட்டியதே விபத்துக்கு காரணம்: 4 பிரிவுகளின் கீழ் டிரைவர் மீது வழக்கு
சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று வீசிய மர்ம நபர்கள்: தற்கொலை செய்த ஆண் சடலமும் மீட்பு
இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவித்த தி.மலை- சென்னை பீச் பாசஞ்சர் ரயில் திடீர் ரத்து: பொதுமக்கள், பக்தர்கள் ஏமாற்றம்
கர்நாடக மாநிலத்தின் கருத்தை ஆதரிப்பதா?.. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவருக்கு வைகோ கண்டனம்: வழக்கை விரைவுபடுத்தி உரிமையை நிலைநாட்ட அரசை வலியுறுத்தல்
திருமணத்திற்கு முன்பு காதலனால் கர்ப்பம்: தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்ஸ்: ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
வெப்ப அலை வீசுவதால் ஏரிகளில் வேகமாக ஆவியாகும் தண்ணீர்: மொத்தம் 6 டிஎம்சி நீர் இருப்பதால் அக்டோபர் வரை சீரான குடிநீர் சப்ளை; பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை
காரியாபட்டி அருகே பயங்கரம்: கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் பலி; 5 கிமீ தூரம் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி