முக்கிய செய்தி இந்தியா பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி வழங்கப்பட்டது தொடர்பான இறுதி அறிக்கையை அளிக்காதது ஏன்?: பெங்களூரு உயர்நீதிமன்றம் கேள்வி Jun 12, 2021 சசிகலா பெங்களூரு சிறை பெங்களூரு உயர்நீதிமன்றம் பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி வழங்கப்பட்டது தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கையை 2 மாதத்திற்குள் சமர்ப்பிக்க கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வந்த போது அவருக்கு சிறையில் விதிகளை மீறி பல சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனை விசாரிப்பதற்காக கர்நாடக அரசு நியமித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார், 295 பக்கம் கொண்ட தனது அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் சசிகலா உட்பட பரப்பன அக்ரஹார சிறையில் பல முக்கிய சிறை கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதற்கு முகாந்திரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இதே புகார் தொடர்பாக 2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த கர்நாடக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தற்போது வரை விசாரணையை முடிக்கவில்லை. இந்த வழக்கின் தற்போதைய நிலை தொடர்பாக கேள்வி எழுப்பிய சென்னையை சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை அபே ஸ்ரீநிவாஸ் ஹோகா மற்றும் சூரஜ் கோவிந்தராஜ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து கடுமையான ஆட்சியபங்களை தெரிவித்த நீதிபதிகள், பல வருடங்களாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக இதுவரை இறுதி அறிக்கை அளிக்கப்படாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் 2 மாதத்திற்குள் இந்த விவகாரம் தொடர்பாக இறுதி அறிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம்: தமிழ்நாடு அரசு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி சாடல்
தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஏப்.29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!!