உலகம் கார் தயாரிப்பு!: பி.எம்.டபிள்யூ முன்னாள் அதிகாரியை ஆப்பிள் நிறுவனம் பணி அமர்த்தியதாக தகவல்..!! Jun 11, 2021 ஆப்பிள் பீஎம்டப்ளியூ வாஷிங்டன்: கார் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பி.எம்.டபிள்யூ நிறுவன முன்னாள் அதிகாரியை ஆப்பிள் நிறுவனம் பணியமர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், எலக்ட்ரானிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் பணிகளை 2024ம் ஆண்டு தொடங்க உள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் உற்பத்தி பிரிவின் முன்னாள் அதிகாரியான ஹோல்ரிச் கிரேன்ஸ் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்துள்ளார். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் கார் தயாரிக்கும் திட்டத்தை தலைமையேற்று வழிநடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. எனினும் ஹோல்ரிச் கிரேன்ஸ், தன் நிறுவனம் கார் உற்பத்தி நடவடிக்கையை வேகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.
துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன் அரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமலான் கொண்டாட்டம்
கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 நபர்கள் கைது..!!
பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை: பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்… உலகின் எந்த கனவு தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல : பூவுலகின் நண்பர்கள் பதிவு
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை.. அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பால் அதிருப்தி!!
இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக் கவுண்டவுன் தொடங்கியது.. ஜூலை 26ல் தொடங்கும் விழா கொண்டாட்டம்..!!
கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி..!!