தமிழகம் நேற்று ஓ.பி.எஸ்...இன்று ஈ.பி.எஸ்!: நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக-வினர் போஸ்டர்..!! Jun 10, 2021 எடிபட்டி பழனிசாமி நெல்லை: நெல்லையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் அதிமுக-வினர் போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருவது அரசியல் கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதிகளில் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் பன்னீர் செல்வத்துடன் கலந்து ஆலோசிக்காமல் முடிவுகள் எடுக்காததால் தான் தேர்தலில் தோற்றதாகவும், இதேநிலை நீடித்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நெல்லை மாநகர் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையிலான போஸ்டர் யுத்தம் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள்: காவேரி கூக்குரலின் மிளகு சாகுபடி கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் பேச்சு
4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில் காசி கூட்டாளியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: ஆபாச வீடியோ வழக்கு சூடுபிடிக்கிறது
தினகரன்- சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சி: 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்
கனடாவில் நடந்த போட்டியில் வரலாறு படைத்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்