பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 17 பேர் பிடிப்பட்டனர்

பல்லாவரம்: கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் அருள்நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் யமுனை தெருவை சேர்ந்த பிரபல ரவுடி உதயகுமார்(28) கடந்த 7ம் தேதி இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை பெரிய பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், பட்டாக் கத்தியால் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி உதயகுமார் உள்ளிட்ட அவரது நண்பர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை இதில் தொடர்புடைய இரும்புலியூர் அஜித்(22), அருள் நகர் ரவீன் குமார்(19), வர்கீஸ்(20) உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவர். ரவுடி உதயகுமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: