புதுடெல்லி: இரண்டு முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சோதனையானது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதற்கான அனைத்து சோதனைகளை மேற்கொள்ளும் முயற்சிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.அதன் படி பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியினை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான சோதனை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று தொடங்கியது.