பெரம்பூர்: சென்னை பெரம்பூர் வீனஸ் பகுதி அருகேயுள்ள தில்லைநாயகம் பிள்ளை தெருவை சேர்ந்த இளைஞர்கள் 25க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் ஒத்துழைப்போடு தினமும் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகின்றனர். காலை 7 மணிக்கு உணவு சமைக்க ஆரம்பிக்கும் இளைஞர்கள் 11 மணிக்குள் உணவை சமைத்து முடித்து மதியம் 1 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். குறிப்பாக, சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள தூய்மைப்பணியாளர்கள், மருத்துவமனைகளில் வேலை செய்யும் செவிலியர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.