நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி மேல கலுங்கடி பகுதியை சேர்ந்தவர் அம்பிதாஸ். பெயின்டிங் தொழில் செய்து வருகிறார். தற்போது கொரோனா முழு ஊரடங்கு காரணமாக தொழில் முடக்கம் ஏற்பட்டதால் வீட்டிலேயே இருந்து வருகிறார். தற்போது இவர் தீக்குச்சிகளை கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை வரைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது: தமிழக முதல்வரை நேரில் சந்திக்கும் போது இந்த படத்தை பிரேம் செய்து அவரிடம் வழங்க முடிவு செய்துள்ளேன். 2 ஆயிரம் தீக்குச்சிகளை கொண்டு இந்த படத்தை வரைந்துள்ளேன்.