சென்னை: தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம், கோதாவரி - காவிரி நதிகளை ஒன்றிணைக்கும் வரைவு அறிக்கையை தயாரித்து இறுதி செய்து மாநிலத்தின் கருத்துகளுக்காக அனுப்பியுள்ளது என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு உங்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.