குற்றம் சவூதி அரேபியாவில் இருந்து டெல்லிக்கு கடத்திவரப்பட்ட ரூ.3.19 கோடி மதிப்புள்ள 367 ஐபோன்கள் பறிமுதல்!: புலனாய்வு அதிகாரிகள் அதிரடி..!! Jun 03, 2021 சவூதி அரேபியா தில்லி டெல்லி: சவூதி அரேபியா தலைநகர் யாத்தில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட மூன்றேகால் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன்கள் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கார்கோ விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு ஐபோன்கள் கடத்தி கொண்டுவரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள், சிறப்பு புலனாய்வு நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் ஏற்றுமதி ஆணையரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் உஷாரான அதிகாரிகள் அனைத்து பார்சல்களையும் முழுமையாக சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வீட்டு உபயோக பொருட்கள் என்று எழுதப்பட்டிருந்த 8 கொரியர் பார்சல்களை பிரித்து பார்த்தபோது அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பார்சல்களில் தலா 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 367 ஐபோன்கள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 3 கோடியே 19 லட்சம் ரூபாயாகும். இவைகள் சவுதி அரேபியாவின் தலைநகர் யாத்தில் இருந்து அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை பயன்படுத்தி இந்த கடத்தல் நடைபெற்றிருக்கலாம் என தெரிகிறது. இந்த செல்போன் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள் என்ற போர்வையில் தங்கம் கடத்தப்பட்டிருப்பது அங்குள்ள அதிகாரிகளையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை
கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு அதிமுக பிரமுகர் மண்டை உடைப்பு: இளைஞரணி துணை செயலாளர் மீது வழக்கு
50 தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருந்து ஆபாசமாக படமெடுத்து பணம் பறித்த பெண்: உடந்தையாக இருந்த கும்பல் சிக்கியது; சுருட்டிய லட்சக்கணக்கான ரூபாயில் கோவாவில் நடிகைகளுடன் உல்லாசம்; வட்டிக்கு விட்ட சம்பாதித்தது அம்பலம்
அடிக்கடி மது வாங்கி கொடுத்து தந்தையை வீட்டில் மட்டையாக்கி 21 வயது மகளுடன் 47 வயது காதலன் உல்லாசம் : திடீரென போதை தெளிந்து பார்த்ததால் அடித்துக்கொலை; விசாரணையில் திடுக் தகவல்கள்
கட்டாய திருமணத்துக்காக பிளஸ்-2 மாணவி காரில் கடத்த முயற்சி: போக்சோ வழக்கில் தாயுடன் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
கோயிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பு மோதல், கலவரம்: கடைகளுக்கு தீ வைப்பு; வாகனங்கள் சூறை, போலீஸ் தடியடி : 19 பேர் கைது – மறியல்
ஆபாச வீடியோக்களை பரப்பி விடுவதாக கூறி இளம்பெண்ணை பணம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தான் வாலிபர்: சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்