கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து மாதிரவேளூர் செல்லும் வழியில் சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் 100 ஆண்டுகளை கடந்த மரங்கள் உள்ளன.இதில் 150 வருடங்கள் பழமையான தூங்கு மூஞ்சி மரத்திற்கு நேற்று சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால், தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்தும் மரத்தில் இருந்த இரண்டு பெரிய கிளைகள் தீயினால் முறிந்தது.