5 கூடுதல் எஸ்பிக்கள் மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: 5 கூடுதல் எஸ்பிக்களை மாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்த சிலம்பரசன், கோவை நகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஆசைத்தம்பி, டிஜிபி அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் எஸ்பியாக இருந்த சாஜிதா, சென்னை நகர சைபர் கிரைம் கூடுதல் துணை கமிஷனராக மாற்றப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த விஜயராமன், டிஜிபி அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி லாவண்யா, மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

Related Stories: