சென்னை சென்னையில் பத்ம சேஷாத்ரியை தொடர்ந்து கேந்திர வித்யாலயா பள்ளியிலும் பாலியல் சித்ரவதை!: பழைய மாணவிகள் 22 பேர் புகார்..!! Jun 01, 2021 பத்ம சேஷாத்ரி சென்னை கேந்திர வித்யாலயா பள்ளி சென்னை: சென்னையில் பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னை அடையாறில் செயல்படும் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா மேல்நிலை பள்ளியிலும் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக பழைய மாணவிகள் 22 பேர் புகார் அளித்துள்ளனர். அடையாறில் சி.எல்.ஆர்.ஐ. எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்படும் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து 18 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. சென்னையில் பத்ம சேஷாத்ரி பள்ளி மீது பாலியல் புகார் விடுத்தது அடுத்து, தமக்கு நேர்ந்த பாலியல் சித்ரவதை குறித்து கேந்திர வித்யாலயா பள்ளியில் படித்த பழைய மாணவி, சமூக வலைத்தளத்தில் தமது மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.இதனை கண்ட மேலும் பல மாணவிகளும் இதுபோன்ற பாலியல் சித்திரவதையை தாமும் அனுபவித்ததாக பதிவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட 22 பழைய மாணவிகள் பள்ளி முதல்வரிடம் புகாராக அளித்துள்ளனர். பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த சி.எல்.ஆர்.ஐ. பள்ளி முதல்வர் ராம பிரசாந்த், பாலியல் புகார் குறித்து விசாரிக்க 2 ஆசிரியர் மற்றும் சி.எல்.ஆர்.ஐ. முதன்மை ஆய்வாளர் அடங்கிய 3 நபர் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். புகார் அளித்த பழைய மாணவிகளில் தற்போது 28 வயதுள்ள ஒரு பெண் அளித்திருக்கும் புகாரில், கேந்திர வித்யாலயா பள்ளியில் தமக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை விளக்கியுள்ளார். தமக்கு என்ன நடக்கிறது என்று விவரம் தெரியாத வயதில் ஆசிரியர் செய்த பாலியல் அத்துமீறல் குறித்து அவர் விரிவாக கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட மனக்காயத்தின் வலி, இன்னும் தொடர்வதாக அந்த பழைய மாணவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை 7 மணி நேரம் பாதிப்பு; அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் இயல்புநிலை திரும்பியது
28 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 185 சவரன், 398 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆவடி காவல் ஆணையர் வழங்கினார்
பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர் 80.8% தேர்ச்சி: 7 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தல்
புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்
கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110 கோடியில் நவீன வசதிகளுடன் 6 மாடியில் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டம் வடசென்னை மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு
மாநகராட்சி ஆணையர் பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி: காவல் நிலையத்தில் புகார்
பருவ மழை காலத்தில் வெள்ள நீர் விரைந்து வெளியேற வசதியாக நீர்நிலை, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி விரைவில் தொடக்கம்: அகற்றப்படும் குடும்பங்களுக்கு வேறு இடங்களில் வீடு ஒதுக்கீடு
திருவான்மியூரில் கழுத்து அறுத்து பெண் கொலை பக்கத்து வீட்டு சிறுவன், 2 நண்பர்களுடன் கைது: மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு