பொன்னேரி: திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி-யாக நேற்று புதிதாகப் பொறுப்பேற்ற டாக்டர் வருண்குமாருக்கு, மீஞ்சூர் அடுத்த காட்டூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட லிங்கபையன்பேட்டையில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் மேற்பார்வையில், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் காட்டூர் காவல்நிலைய எஸ்ஐ வினோத்குமார் தலைமையில் தனிப்படையினர் லிங்கபையன்பேட்டை பகுதியில் நேற்று மாலை கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.