‘கமல், சரிகா பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே’: சொல்கிறார் ஸ்ருதிஹாசன்

சென்னை: தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘லாபம்’, தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ‘சலார்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், தன் தந்தை கமல்ஹாசனும், தாய் சரிகாவும் விவாகரத்து பெற்று பிரிந்தபோது, தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: என் பெற்றோர் அவரவர் வாழ்க்கையை தனியாக வாழ முடிவு செய்து பிரிந்தபோது நான் சந்தோஷப்பட்டேன். எண்ணங்கள் பொருந்தி வராத இருவரும் சில காரணங்களுக்காக சேர்ந்து வாழ்வது என்பது முடியாது. எனவே, அவர்கள் இருவரும் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் எனக்கும், தங்கை அக்‌ஷராவுக்கும் அருமையான பெற்றோராக இருக்கின்றனர். நான் என் அம்மாவை விட அப்பாவிடம்தான் அதிக பாசம்.

அம்மா நன்றாக இருக்கிறார். எங்கள் வாழ்க்கையில் அதிக பங்கு வகிக்கிறார். எல்லாம் நன்மைக்காகவே நடந்திருக்கிறது. அப்பாவும், அம்மாவும் மிகவும் நல்லவர்கள். ஆனால், சேர்ந்து இருந்தபோது அவர்களுக்கு இடையே சரிப்பட்டு வரவில்லை. சேர்ந்து இருந்த நேரத்தை விட, பிரிந்த பிறகே அதிக சந்தோஷமாக இருந்தார்கள்.

Related Stories: