முக்கிய செய்தி இந்தியா கொரோனாவுக்கு மத்தியில் மிரட்டும் கருப்பு பூஞ்சை நோய்!: இந்தியா முழுவதும் 8,848 பேர் பாதிப்பு..முதல் இடத்தில் குஜராத்..மத்திய அரசு அறிவிப்பு..!! May 22, 2021 இந்தியா குஜராத் மத்திய அரசு டெல்லி: இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 2,281 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மராட்டியம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் இருக்கின்றன. மராட்டியத்தில் 2 ஆயிரம் பேருக்கும், ஆந்திராவில் 910 பேருக்கும், மத்தியப்பிரதேசத்தில் 720 பேருக்கும் கருப்பு பூஞ்சை ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, பீகாரில் 56 பேரும், சண்டிகரில் 8 பேரும், சத்தீஸ்கரில் 87 பேரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். டெல்லியில் 197 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கோவாவில் 12 பேர், ஹரியானாவில் 250 பேரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜஸ்தானில் 700, தெலுங்கானா 350, கர்நாடகா 500 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் 48 பேர் இந்நோய்க்கு இலக்காகி இருக்கின்றனர். கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 23,680 மருந்து குப்பிகள் மருந்துகள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்து தட்டுப்பாட்டை நீக்க உடனடி நடவடிக்கை தேவை என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார். லிப்போசோமல் ஆம்போடெரிசின் மருந்து தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற கருப்பு பூஞ்சை நோயை சேர்க்கவும் சோனியா கோரிக்கைவிடுத்துள்ளார்.
ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா ₹25 கோடி லஞ்ச பேர விவகாரம்; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமைச்சர் மீது அவதூறு வழக்கு: பாஜக நிர்வாகி அளித்த புகாரில் கோர்ட் உத்தரவு
தமிழ்நாடு உட்பட 5 தென் மாநிலங்களில் இருக்கும் 42 நீர்த்தேக்கங்களில் 17% மட்டுமே நீர் இருப்பு: பாசனம் வசதி, குடிநீர் தேவை, மின் உற்பத்திக்கு கடும் பாதிப்பு; 10 ஆண்டில் இல்லாத அளவிற்கு நீர்மட்டம் சரிந்ததால் கவலை
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?.. விசாரணை தொடங்கியதற்கும் கைது நடவடிக்கைக்கும் இடைவெளி அதிகம் : உச்சநீதிமன்றம்
2 கட்ட வாக்கு சதவீதத்தை உடனடியாக இணையதளத்தில் வெளியிட்டு வாக்காளர்களின் நம்பிக்கையை மீட்க வேண்டும் :சீதாராம் யெச்சூரி வேண்டுகோள்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
கர்நாடகவில் பெரும் புயலை கிளப்பிய விவகாரம் : பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை பாஜக நிர்வாகியே வெளியிட்டதாக கார் ஓட்டுனர் வாக்குமூலம்!!
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க குரல் எழுப்பும் தினமாக அமையட்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் மே தின வாழ்த்து
மன்னிப்பு கோரி நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரங்களின் அசலை தாக்கல் செய்ய பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்: முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் கருத்து
சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் – நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
அவசர உதவி எண் “100” செயல்படவில்லை… உங்கள் அழைப்பு வெயிட்டிங்கில் உள்ளது, தயவு செய்து காத்திருக்கவும் என்ற குரலால் மக்கள் அதிர்ச்சி!!
பாலியல் புகாரில் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய பிரஜ்வாலை கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை.. கட்சியில் இருந்தும் அதிரடி நீக்கம்!!
தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது… கோவை தொகுதி தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்