சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலைக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அமைச்சரவை 2018 செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.