கம்பம்: கம்பம் அருகே உள்ள கே.கே.பட்டியைச் சேர்ந்த மணிசேகருக்கு சொந்தமான 5 ஏக்கர் தோட்டம், கருநாக்கமுத்தன்பட்டி விலக்கு அருகே உள்ளது. இந்த தோட்டத்தை புதுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் குத்தகைக்கு எடுத்து 4 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். இதில், 2 ஏக்கரில் திராட்சை தோட்டம் உள்ளது. 10 நாட்களில் திராட்சை பழங்கள் வெட்டும் தருவாயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற கணேசன், நேற்று காலை தோட்டத்திற்கு வந்தபோது, அங்கிருந்த 500 திராட்சைக் கொடிகள் வெட்டி சேதப்படுத்தியதைக் கண்டார். இது குறித்து மணிசேகருக்கும், ராயப்பன்பட்டி போலீசாருக்கும் தகவல் அளித்தார்.