கத்தார்: கொரோனா தடுப்பூசி வெளியாகி உலகம் முழுவதும் போடப்பட்டு வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘கொரோனா நோயாளிகளை ஒட்டகங்களின் ஏற்பி செல்கள் (ஆன்டிபாடி) மூலம் குணப்படுத்த முடியும். எந்தவொரு பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் ஒட்டகத்தில் வைரஸ் ஏற்பி செல் அதன் உடம்பில் இல்லை. ஆனால், மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் ஏற்பி செல் வகைகள் உள்ளன. கொரோனா தொற்று ஏற்பி செல் மூலமே மனிதர்களில் அந்த வைரஸ் பரவுகிறது. ஒட்டகத்தின் மியூகோசா செல்லில், கொரோனா வைரஸ் செல் ஒட்டிக்கொள்ள முடியாது.