முக்கிய செய்தி இந்தியா 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு 9 ஆயிரத்து 871 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது மத்திய அரசு: தமிழகத்திற்கு 183.67 கோடி ரூபாயை ஒதுக்கீடு May 07, 2021 மத்திய அரசு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் டெல்லி: வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு 9 ஆயிரத்து 871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு 183.67 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மாநிலங்களின் வருவாய் மற்றும் செலவினத்துக்கு இடையிலான வித்தியாசத்தை பொருத்து வருவாய் பற்றாக்குறை நிதி மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கு தமிழகம், ஆந்திரா, அரியானா, அசாம், இமாச்சல பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு 9 ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 2 தவணைகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் இதுவரை 19 ஆயிரத்து 742 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்திற்காக 183.67 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இரண்டு தவணைகளையும் சேர்த்து தமிழகத்திற்கு இதுவரை ரூ.367.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிதியாக 1 லட்சத்து 18 ஆயிரத்து 452 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று 15-வது நிலைக்குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த தொகை 12 தவணைகளாக ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு!: குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!!
ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி; ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம்
2ம் கட்ட மக்களவை தேர்தல்; 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது: ராகுல், ஓம்பிர்லா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்
வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, ராகுலின் பிரசாரம் குறித்து புகார், பா.ஜ – காங்கிரசுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி, 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க கெடு
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது; 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு: ராகுல், சசிதரூர், டி.கே.சுரேஷ் தொகுதிகளுக்கும் நடக்கிறது
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முகூர்த்த தினம், வார இறுதிநாளை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவல் பரப்புவதா? நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் : பிரதமருக்கு கார்கே கடிதம்!!
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடிக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப தைரியம் இல்லை… பாஜகவின் பி டீம் ஆனது தேர்தல் ஆணையம் என காங்கிரஸ் விமர்சனம்!!
தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்