சென்னை கொரோனா தொற்றால் உயிரிழந்த தலைமைக் காவலர் கமலநாதனுக்கு காவல் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை..!! May 07, 2021 மலர்தூவி தலைமை காவலர் கமலநாதன் சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்த தலைமை காவலர் கமலநாதனுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தியது உணர்ச்சிகரமாக இருந்தது. சென்னையில் கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமெடுத்துள்ளது. கொரோனாவால் நேற்று ஒரேநாளில் மட்டும் 6,678 பேர் பாதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 3,70,596 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு குறைந்தபாடில்லை. காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்த தலைமைக் காவலருக்கு அஞ்சலி காவல் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை, மோட்டார் வாகன பிரிவில் தலைமை காவலராக பணியாற்றிய எஸ்.கமலநாதன், கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 4ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் அகர்வால், கமலநாதன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் காவல்துறை அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு