மதுரை: தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையின்போது அமலில் இருந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். முதல் அலையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே இன்னும் அவர்கள் மீளவில்லை.