வேடசந்தூரில் திமுக செயற்குழு கூட்டம்

வேடசந்தூர், ஏப். 4: வேடசந்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட அவை தலைவர் மோகன் தலைமை வகிக்க, தலைமை கழக பொறுப்பாளர் நாச்சிமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வி ராமச்சந்திரன், தெற்கு ஒன்றிய தொகுதி பொறுப்பாளர் வெங்கிடுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பூபதி மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை துவங்குவது, பூத் கமிட்டி அமைப்பது, திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்ப்பது, ஜூன் 3ல் கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேரூர் செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

The post வேடசந்தூரில் திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: