தமிழகம் வாக்குப்பெட்டி எண் மாறிவிட்டது!: திருமங்கலம் தொகுதி தேர்தல் அலுவலரிடம் திமுக முகவர்கள் வாக்குவாதம்..!! May 02, 2021 திமுக திருமங்கலம் தொகுதி மதுரை: திருமங்கலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது. முறைகேடுகள் நடப்பதாக திமுகவினர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். மதுரை தமிழ்நாடு பாலிடெக்னீக் கல்லூரியில், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்கப்படை கிராமத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குச்சாவடி இயந்திரத்தின் பெட்டி எண் மாறி இருப்பதாக திமுக முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 10 சுற்றின் முடிவில், மொத்தம் 70,397 வாக்குகள் எண்ணப்பட்டு அதில் அதிமுக வேட்பாளர் 29,891 வாக்குகளும், திமுக வேட்பாளர் 28,980 வாக்குகளும், அமமுக வேட்பாளர் 3,998, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் 1,694 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 4,418 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் நோட்டாவுக்கு 355 வாக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 911 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து வாக்குப்பெட்டியில் குளறுபடி இருப்பதாக கூறி திமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டு சண்டை போடுவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக திருமங்கலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்பு!
சமவெளியில் ஏற்றுமதி தரத்தில் மிளகு சாகுபடி சாத்தியமே: பொள்ளாச்சியில் நடைபெற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கில் வல்லுநர்கள் தகவல்
விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள்: காவேரி கூக்குரலின் மிளகு சாகுபடி கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் பேச்சு
4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில் காசி கூட்டாளியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: ஆபாச வீடியோ வழக்கு சூடுபிடிக்கிறது
தினகரன்- சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சி: 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்
கனடாவில் நடந்த போட்டியில் வரலாறு படைத்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்