களமிறங்கிய முதல் தேர்தலில் தனது வெற்றியை பதிவு செய்த திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 45,118 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன.  சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாமக சார்பில் கசாலி, அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளனர். 

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். தற்போதைய நிலவரப்படி அவர் 45,118 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். உதயநிதி 61,488 வாக்குகளும், பாமக வேட்பாளர் கசாலி 16,370 வாக்குகளும் பெற்றுள்ளனர். முதல் தேர்தலிலேயே தனது முதல் வெற்றியை பெற்றுள்ளார்.

Related Stories: