நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு ராஜேஸ்வரி என்ற பெண் காவலர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவரை அழைத்துச் செல்லும் போலீசார் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மருத்துவரின் காரில் அழைத்துச் சென்றனர்.