ஊட்டி: ஊட்டியில் - கூடலூர் சாலையில் தலைகுந்தா அருகே சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் தற்போது பல்வேறு பகுதிகளிலும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைகுந்தா அருகே முத்தநாடு கிராமத்திற்கு செல்லும் சந்திப்பு பகுதியிலும் தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் சாலையோரத்தில் உள்ள ஒரு மின் கம்பம் சற்று சாய்ந்துள்ளது. அதேசமயம், அதற்கு எதிரே உள்ள மின் கம்பம் காமராஜ் சாகர் அணையின் கரையோரத்தில் அமைந்துள்ளது. சேறும், சகதியும் நிறைந்த சதுப்பு நிலத்தில் இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால், மின் கம்பம் சேற்றில் புதையுண்டுள்ளது. இதனால், சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது.