கரூர்: கரூர் அருகே கடப்பாரையால் தாக்கி தாயை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜங்கால்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ்(35) பக்கத்து வீட்டில் உள்ள சக்திவேல் என்பவருடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட மகன் முத்துராஜை தாய் பழனியம்மாள் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகன் முத்துராஜ் கடப்பாரையை எடுத்து தாய் பழனியம்மாளை தாக்கி கொலை செய்துள்ளார்.