அலங்காநல்லூர்: அழகர்கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி கோயில் வளாகத்தில் நேற்று சேஷ வாகனத்தில் அழகர் புறப்பாடு நடந்தது. மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம், கோயில் வளாகத்தில் அமைத்த செயற்கை வைகையாற்றில் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 8 மணிக்கு கோயில் உள் பிரகாரத்தில் சைத்திய உபச்சார சேவை பக்தி உலாத்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30 மணிக்கு சேஷ வாகனத்தில் அழகர் புறப்பாடு நடந்தது. இதிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.