இந்தியா வேகமெடுக்கும் கொல்லுயிரி வைரஸ்!: புதுச்சேரியில் 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி..!! Apr 28, 2021 புதுச்சேரி: புதுச்சேரியில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. 110 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று என்பது தீவிரமாக பரவி வருகிறது. இன்று இதுவரை இல்லாத அளவாக 1254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உயர்ந்தபட்ச அளவாக உள்ளது. தொடர்ந்து 3வது நாளாக இன்று மேலும் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. இதில் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், ஒப்பளம், முதலியார்பேட்டை, ராஜ்பவன், நெல்லித்தோப்பு உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதி முகவர்களுக்கான பரிசோதனை என்பது நடைபெற்றது. இந்த பரிசோதனை சரியாக முறைப்படுத்தப்படாததால் முகவர்கள் கூட்டமாக குவிந்தனர். இந்த நிலையில், 300 முகவர்களில் 110 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமடைந்த சுகாதாரத்துறை ஊழியர்கள், அனைத்து முகவர்களையும் முகக்கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை விட்டு நிற்க கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் வரவழைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்ற நிலையே பல்வேறு பகுதிகளிலும் நீடித்து வருகிறது.
விவசாயிகள், சாமானியர்களின் அவலநிலையை சீராக்க அமைதியில்லா ஆன்மாவாக 100 முறை கூட இருக்க தயார்: பிரதமர் மோடி பேச்சுக்கு சரத்பவார் பதிலடி
காஷ்மீர் விபத்தில் ஏற்காடு ஆசிரியை குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு: கோடை சுற்றுலா சென்ற போது கார் கவிழ்ந்தது
மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2 பழங்குடி பெண்களை வன்முறை கும்பலிடம் விட்டுச் சென்ற போலீஸ்: அடைக்கலம் தேடியவர்களுக்கு அநியாயம்; சிபிஐ குற்றபத்திரிகையில் பகீர் தகவல்
95 டிஎம்சி நிலுவை நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?… அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
மோடி, அமித்ஷா முடிவெடுத்து விட்டனர்; பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை தூக்கி எறியும்: ராகுல் காந்தி பிரசாரம்