ஐகோர்ட் மதுரை கிளையில் மூத்த நீதிபதி- 12 பேருக்கு கொரோனா தொற்று

மதுரை: கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குகள் ஆன்லைன் முறையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற பணியாளர்கள் மட்டும் பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில், ஒரு மூத்த நீதிபதி, உதவி துணை பதிவாளர், அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், தோட்ட பணியாளர், ஆவண பிரிவு அலுவலர், கணினி பிரிவு ஊழியர் உள்ளிட்ட 13 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: