கரூர் ராயனூர் மேற்கு பகுதியில் சாலையில் ஆறு போல் வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் கடும் அவதி

கரூர் : கரூர் ராயனூர் மேற்கு பகுதி சாலையில் கழிவு நீர் சாலையில் செல்வதை தடுத்து நிறுத்தி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை அருகே ராயனூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில், மேற்கு பகுதியில் கழிவு நீர் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் சாலையில் செல்கிறது. இதனால், ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக பகுதியினர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, இதனை விரைந்து சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் இதனை விரைந்து சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: