தமிழகம் தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா 2ம் அலை!: டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி ஐகோர்ட் கிளையில் முறையீடு..!! Apr 27, 2021 கொரோனா தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் Icourt Tasmag மதுரை: தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தீவிரமாக இருப்பதால் மதுக்கடைகளை முழுவதுமாக மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டிருக்கின்றது. மனுவாக தாக்கல் செய்தால் நாளையே விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உறுதி அளித்துள்ளனர். திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தரப்பில் அவரது வழக்கறிஞர் நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி முன்பாக முறையீட்டை முன்வைத்தார். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் 2ம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. தினந்தோறும் ஏராளமான மக்கள் இந்த நோய் தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது, கொரோனா வேகமெடுத்துள்ளதால் வழிபாட்டு கூட்டங்கள், பொது கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுக்கடைகளுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மதுகடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கொரோனா பரவல் மிக அதிக அளவில் பரவ வாய்ப்பிருக்கிறது. ஆகவே தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முழுவதுமாக மூட உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள் இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்யவும், நாளை விசாரணைக்கு ஏற்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது.
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்; 7,8 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!