ஆஸ்திரேலியா: மே-15 தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பயணிகள் விமான சேவை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் விமான சேவையை ரத்து செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவில் இருந்து வரும் நேரடி பயணிகள் விமானங்களுக்கு வரும் மே 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார்.