மானூர் அருகே கிணற்றில் விழுந்த மான் மீட்பு

மானூர் : உக்கிரன்கோட்டையில் குடியிருப்பு பகுதியில் முருகேசன் என்பவரது கிணற்றில் நேற்று முன்தினம் இரவு ஆண் புள்ளிமான் ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. நேற்று காலை அதனை பார்த்த பொதுமக்கள் மீட்டு மானூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் நெல்லை வனச்சரக வனவர் குமார், வனக்காவலர் டென்சிங் ஆகியோரிடம் மானை ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் மானை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Related Stories: