திண்டுக்கல்: தாடிக்கொம்புவில் போடப்பட்ட புதிய தார் சாலையில் ஒரு வாரத்திலே மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளத திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்டது பாரதி நகர், அம்மன் நகர், முத்து நகர், எம்கே நகர். இப்பகுதிகளுக்கு செல்லும் சாலை கடந்த 2 வாரங்களுக்கு புதிதாக போடப்பட்டது. இப்பகுதி மாணவ, மாணவிகள், பஞ்சாலை தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். ஜல்லி கற்கள் கொட்டியதோடு கிடப்பில் கிடந்த இச்சாலை பணி தினகரன் செய்தி எதிரொலியாலும், சட்டமன்ற தேர்தலையொட்டியும் அவசர, அவசரமாக போட்டு முடிக்கப்பட்டது.