சென்னை ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை!: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் உட்பட 5 பேர் கைது..!! May 18, 2021 சென்னை கீழ்ப்படியாத அரசு மருத்துவமனை தின மலர் சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த அதே மருத்துவமனை தற்காலிக ஊழியர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒரு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியரை தேடி வருகின்றனர். சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த போதும், இவர் போலி ஆவணங்கள் மூலம் பல முறை மருந்து வாங்கியுள்ளார். பின்னர் அறுவை சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மற்றொரு தற்காலிக ஊழியரான மணி என்பவருடன் சேர்ந்து முகமது கலீல் என்பவரிடம் ஒரு குப்பி 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். திருவல்லிக்கேணியில் மருந்து கடை வைத்துள்ள இர்பான் என்பவரிடமும் இவர் மூலம் கைமாற்றி விற்பனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் நோயாளி ஒருவருக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவை என விளம்பரம் செய்து அதற்கு யாரெல்லாம் பதிலளிக்கிறார் என கவனித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன்படி ஆரிப் என்பவர், தன்னிடம் 25,000 ரூபாய்க்கு ரெம்டெசிவிர் மருந்து இருப்பதாக கூறி விற்பனை செய்ய கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது, ஆரிப் கொடுத்த தகவலின் பேரில் மீதமுள்ள 5 பேரையும் கைது செய்துள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்த மருந்தை வாங்க முடியாது. எனவே மருத்துவர்கள் யாரேனும் இதற்கு துணை போனார்களா? என்ற அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். … The post ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை!: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் உட்பட 5 பேர் கைது..!! appeared first on Dinakaran.
சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வந்த செய்தி தவறானது: பூங்கா இயக்குனர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
கடந்த 9 ஆண்டுகளாக உயர்த்தப்படாத போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: ரயில்வே தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
மீன் வியாபாரி கொலை வழக்கில் பெண்கள் உள்பட 5 பேர் கைது: கஞ்சா விற்றதை காட்டிக் கொடுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
குடிநீர், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணத்தை 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் மீன் அங்காடி, கைப்பந்து விளையாட்டு மைதானம், உள்விளையாட்டு அரங்கம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்