சென்னை: .தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில், மின்வாரிய இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 10,000 கேங்மேன் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதிகபட்சம் வெளிமாவட்டங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் பணியேற்பு செய்துள்ளனர். திட்ட அளவிலான (மாவட்டத்திற்குள்) முதன்மை பட்டியலை கொண்டுள்ள களப்பணி பிரிவினரில், ஒரு புதிய பதவியாக கேங்மேன் உருவாக்கப்பட்டுள்ளது.