புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. இன்று வரலாறு காணாத அளவுக்கு ஒரே நாளில் 715 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 47,108 ஆகவும், இதுவரை 705 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனா பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியே வந்தால் வழக்கு பதியவும், வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.