திருப்புவனம்: கீழடி 7ம் கட்ட அகழாய்வில் பழங்கால கல் உழவு கருவி, சுடுமண் தாயகட்டை, கருப்பு வண்ண பானை ஓடுகள் கிடைத்துள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்.13ம் தேதி தொடங்கியது. கணேசன் என்பவரது நிலத்தில் நடந்து வரும் அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய சிறிய பானை, பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. நேற்று சுடுமண் தாயக்கட்டை கண்டறியப்பட்டது. நான்கு பக்கமும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு புள்ளிகள் கொண்ட இந்த தாயக்கட்டை முழுமையான அளவில் கிடைத்துள்ளது. மேலும் தொடக்க காலத்தில் உழவு பணிக்காக பயன்படுத்திய கல்லால் செய்யப்பட்ட கொழுவும் கிடைத்துள்ளது.