மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது, இதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவாலா நேற்று கூறுகையில், `‘அரசு மற்றும் அதிகாரிகள் தொடர்பான இடையூறுகளால் தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை அனுப்புவதில் சீரம் நிறுவனம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது,’’ என்றார்.