திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதிகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் எல்இடி பல்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வாகனஓட்டிகள் தடுமாறி விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் ஏராளமானவை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த வாகனங்களில் வெள்ளை நிற ஒளி வரும் எல்இடி பல்புகளின் புழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த பல்புகளின் வெளிச்சம் கண்களை கூசுவதுடன், எதிரே வரும் வாகனஓட்டிகள் செல்ல முடியாமல் தடுமாற வேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்போது இருசக்கர வாகனங்களின் ஹெட்லைட்டுகளிலும் இந்த எல்இடி பல்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.