நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஆடி மாதம் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும், வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த கோயிலுக்கு தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானோர் சடங்கு செய்வதற்காக கோயிலுக்கு அருகே உள்ள ஊத்துப்பள்ளம் தடுப்பணையில் நீராடுகின்றனர்.