இளவரசர் பிலிப், மருத்துவர் கோபால் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: இளவரசர் பிலிப் மற்றும் வண்ணாரப்பேட்டை மருத்துவர் கோபால் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இளவரசர் பிலிப் மறைவுச் செய்திகேட்டு வருத்தமுற்றேன். தி.மு.க. சார்பிலும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பிலும் அரச குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சார்ந்த சமூக சேவை மருத்துவர் கோபால் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எவருக்கும் எளிதில் கிடைத்திடாத ‘10 ரூபாய் டாக்டர்’ என்ற அடைமொழியை மருத்துவத்தை சேவையாகச் செய்து பெற்றவர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: