புதுடெல்லி: தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் மக்கள் மீது குரங்குகளை ஏவிட்டு அச்சுறுத்தி பணம், நககைளை கொள்ளையடிக்க முயற்சித்த வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். தெற்கு டெல்லியின் மால்வியா நகரில் கடந்த மார்ச் 2ம் தேதியன்று வக்கீல் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து கொண்டு அவரை ஆட்டோ ரிக்ஷாவுக்குள் தள்ளினர். பின்னர் வக்கீலின் முன் இருக்கையில் ஒரு குரங்கயைும் பின் இருக்கையில் மற்றொரு குரங்கயைும் அமரவைத்து வக்கீலிடம் பணம் கேட்டு மிரட்டினர். தரமறுத்தால் குரங்கை மேலே ஏவிவிடுவதாக கூறி பயமுத்தினர். இதனால் வக்கீல் தனது பர்சை பாக்கெட்டில் இருந்து எடுத்தார். அந்த சமயத்தில் மூன்று பேர் கும்பல் 6000 பணத்துடன் பர்சை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட வக்கீல் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் கண்காணித்து வந்தனர்.