கூடலூர்: கூடலூர் அருேக நள்ளிரவில் வீட்ைட உடைத்து காட்டு யானை அட்டகாசம் ெசய்தது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவாலா அட்டி பகுதியில் வசிப்பவர் முருகையா. கூலித் தொழிலாளியான இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தாருடன் உறங்கிக் கொண்டு இருந்தார். இரவு 2 மணியளவில் அப்பகுதியில் புகுந்த 2 காட்டு யானைகள் முருகையாவின் வீட்டின் பின்புற சமையலறை கூரை மற்றும் அருகில் இருந்த அறையின் சுவற்றை இடித்து உள்ளே இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியது.