தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் முலாம்பழம் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. ஒருகிலோ ரூ20 முதல் ரூ25 வரை விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.வெயிலின் தாக்கத்தை தணிக்க இளநீர், தர்பூசணி, முலாம்பழம் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ள தொடங்கியுள்ளனர். இதை தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து முலாம்பழத்தை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து, சந்தைபேட்டையில் குவித்து வைத்தும், தள்ளுவண்டி, சரக்கு வாகனங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.