கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே, புகையிலைப்பட்டி கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்த மீன்பிடி திருவிழாவில் நேற்று ஏராளமானோர் கலந்து கொண்டு, மீன் பிடித்துச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே, புகையிலைப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமம் அருகே வலை எடுப்பான்குளம் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு குளம் நிறைந்ததால், ஊர் மக்கள் சார்பில் மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டது. இந்நிலையில், மீன் குஞ்சுகள் வளர்ந்து நேற்று குளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது. முன்னதாக நேற்று காலை குளக்கரையில் உள்ள கொக்கி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின் குளத்தில் கிராம மக்கள் வலை வீசி மீன் பிடிக்கத் தொடங்கினார்.