பைக் விபத்தில் வாலிபர் பலி

பெங்களூரு: பெங்களூரு சதாசிவாநகர் சரகத்திற்குட்பட்ட நியூ பி.இ.எல். சாலையில் உள்ள தனியார் குடியிருப்பு அருகேயுள்ள ரயில்வே பிரிட்ஜ் அருகே வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த பைக், முன்புறம் சென்ற மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயற்சித்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே வந்த புல்லட் மீது மோதியது. இதில் இருவேறு பைக்கில் பயணம் செய்த இரண்டு வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். எம்.எஸ் ராமையா மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த ஒருவர் வாலிபர் நேற்று காலை உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சதாசிவாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் உயிரிழந்த வாலிபர் எம்.கே நகரை சேர்ந்த ஜெயசந்திரா (22)என்று தெரியவந்தது. விபத்திற்கு அதிவேகமே காரணம் என்று தெரியவந்தது. இது குறித்து சதாசிவாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: