கோலார்: கொரோனா தொற்று பரவல் காரணமாக 6 முதல் 9ம் வகுப்புகள் நடத்தகூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளதை மீறி வகுப்பு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எச்சரித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளியில் வகுப்பு நடத்தக்கூடாது என்று அரசு வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.
அதை ஒவ்வொரு பள்ளியும் பின்பற்ற வேண்டும். அரசு உத்தரவு மீறி வகுப்புகள் நடத்தினால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக அரசு உத்தரவை அரசு பள்ளிகள் பின்பற்றும், தனியார் பள்ளிகள் தான் இந்த விஷயத்தில் சரியாக செயல்பட வேண்டும்.